*** BREAKING NEWS ***திருவாரூர் அருகே தமுமுக நிர்வாகி படுகொலை ***

Tuesday 30 June 2009




கடந்த சில தினங்களுக்கு முன்பு தினத்தந்தி என்கிற தினசரி நாளிதழில் திரைபட விளம்பர பக்கத்தில் ராஜாதி ராஜா என்கிற பட விளம்பரத்தில் நபிகள்னா மக்கா ராஜானா பக்கா என்கிற வாசகத்துடன் வெளியானது. இதை கண்ட முஸ்லிம்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதை கேட்காமல் விட்டுவிட்டால் நாளை இதை விட மோசமான விளைவுகள் ஏற்படகூடும் என்று அஞ்சிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் அப்பட இயக்குனரான ஷக்தி சிதம்பரத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு இவ்வாறு விளம்பரம் செய்வது தவறு என்று எடுத்திகூறினர். உடனே ஷக்தி சிதம்பரம் தான் செய்தது தவறுதான் என்று மன்னிப்பு கேட்டதுடன் மன்னிப்பு கடிதமும் எழுதிகொடுத்தார்.


டெல்லி: பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் இன்று தனது அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஒப்படைத்தது.1992ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் கல்யாண் சிங் தலைமையில் பாஜக ஆட்சியில் இருந்தபோது அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். லிபரான் தலைமையில் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் குழு அமைத்தார்.பாபர் மசூதியை இடிக்க தூண்டிய காரணிகள் எவை என்பது குறித்து விசாரிக்க இந்த கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டது.தொடக்கத்தி்ல் 1993ம் ஆண்டு மார்ச் 16ம் தேதியன்று இந்த கமிஷன் தனது அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து நீட்டிப்பு கோரி வந்தது. இந்தக் குழு கடந்த 17 ஆண்டுகளாக விசாரணை நடத்தியது. 48 முறை இந்த கமிட்டியின் ஆயுள் காலம் நீட்டிக்கப்பட்டது.கடைசியாக இந்த ஆண்டு மார்ச் மாதம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது. நாட்டிலேயே அதிக அளவு செலவு பிடித்த கமிஷனும் இதுதான். இதுவரை ரூ. 8 கோடி அளவுக்கு இந்த கமிஷனுக்காக அரசு செலவழித்துள்ளதுஇந் நிலையில் இன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில் தனது அறிக்கையை பிரதமரிடம் தாக்கல் செய்தார் நீதிபதி லிபரான்.அந்த அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது உடனடியாகத் தெரியவில்லை.டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன் நாடு முழுவதும் வெடித்த மதக் கலவரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாயினர். இதையடுத்து 10 நாட்களில் இந்த கமிட்டி அமைக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவிலேயே நீண்ட காலமாக விசாரணை நடத்தி வந்த விசாரணைக் கமிஷன் என்ற பெயர் இந்த கமிட்டிக்குக் கிடைத்துள்ளது.சுமார் 400 முறை இந்தக் குழு கூடி நூற்றுக்கணக்கானோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை வாங்கியது. அதில் பாஜக தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் முதல்வர் கல்யாண் சி்ங், வினய் கத்யார், உமா பாரதி, விஎச்பி தலைவர் அசோக் சி்ங்கால், ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்சன் ஆகியோரும் அடக்கம்.கமிஷன் கடைசி சாட்சியை 2005ம் ஆண்டு விசாரித்து முடித்தது.தாமதத்துக்கு சிலரேர் காரணம்..லிபரான்:சிலரது ஒத்துழைப்பு இல்லாமை, குறிப்பிட்ட சிலரது நடவடிக்கைகள் காரணமாகத் தான் அறிக்கை தாக்கல் செய்ய தாமதமானதாக கூறியுள்ள லிபரான், அதில் கூறப்பட்டுள்ள தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டார்.யார் அந்த குறிப்பிட்ட சிலர் என்பது குறித்தும் அவர் விளக்க மறுத்துவிட்டார்.அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்றே தெரியாத நிலையில் இந்த அறிக்கையில் காங்கிரஸ் தனது கருத்துக்களைத் திணித்துள்ளதாக வினய் கத்யார் கூறியுள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறுகையில், அறிக்கை தாக்கலாகவே இத்தனை காலமாகிவிட்டது. இதனால் இந்த அறிக்கையை உடனடியாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். இதன் மீது என்ன நடவடிக்கை எடு்க்கப் போகிறது என்பதையும் மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.
நன்றி : தட்ஸ்தமிழ்.

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் நாள் முதல் அமெரிக்க படைகள் விலக்கப்பட்டு பாசறைகளுக்குத் திரும்பவுள்ளதால், ஈராக் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் பாக்தாத்தின் பாதுகாப்புப் பொறுப்பிலிருந்தும், பிற நகரங்களின் பாதுகாப்பிலிருந்தும் அமெரிக்க படைகள் விலகிக் கொள்ளவுள்ளன. அங்கிருந்து அவர்கள் பாசறைகளுக்குத் திரும்பவுள்ளனர். இதையடுத்து அந்தப் படைகள் மெல்ல மெல்ல அமெரிக்கா திரும்பவுள்ளன.

இதையடுத்து தாக்குதல்கள் நடைபெறலாம் என்ற அச்சம் இருப்பதால் பாக்தாத் முழுவதும் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

பஸ்ரா, மொசூல் உள்ளிட்ட பிற நகரங்களும் கூட ஈராக் ராணுவத்தினரின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்தநிலையில், பாக்தாத்தின் சாலையோரம் வெடித்த ஒரு குண்டுக்கு 6 பேர் காயமடைந்தனர்.

அதேபோல மேற்கு பாக்தாத்தில் ஒரு கார் குண்டு வெடித்ததில், ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார்.

நன்றி : தட்ஸ்தமிழ்.