Posted by
tmmkuk1@gmail.com
at
11:34
கொழும்பு: இலங்கையின் தென் பகுதியில் இரண்டு முஸ்லீம் குழுக்களிடையே ஏற்பட்ட கடும் மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஒரு பள்ளி வாசல் தீவைத்து எரிக்கப்பட்டது.தென்பகுதியில் உள்ள பேருவளையில் இரண்டு முஸ்லிம் குழுக்களிடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வந்தது.இது நேற்று இரவு பெரும் மோதலமாக வெடித்தது. குறிப்பிட்ட ஒரு மதப்பிரிவினருக்குச் சொந்தமான பள்ளிவாசல் இன்னொரு பிரிவினரால் எரிக்கப்பட்டது.அப்போது நடந்த மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.பேருவளைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் காணப்படுவதால் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நன்றி :தட்ஸ்தமிழ்