*** BREAKING NEWS ***திருவாரூர் அருகே தமுமுக நிர்வாகி படுகொலை ***

Thursday 9 July 2009

நபிமார்களுக்குப் பிறகு அவர்களின் சீரிய தெண்டுகளை அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின நேசர்கள் செய்தார்கள்.அறியாமை இருளில் மூழ்கிக் கிடற்த சமுதாயத்தைத் தட்டி எழுப்பினார்கள். இவர்களின் உயரிய போதனைகளால் உறங்கிக் கிடந்த சமுதாயம் உணர்வு பெற்றது.இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் எழுச்சி பெற்றனர்.ஏராளமானோர் நேர் வழி பெற்றனர்.அதற்காக அவ்லியாக்கள் என்னும் அந்த இறை நேசச் செல்வர்களை நாம் போற்ற வேண்டும். கண்ணியப் படுத்த வேண்டும்.அவர்களைப் போற்றுவது கண்ணியப்படுத்துவது என்பதெல்லாம், அவர்கள் வாழ்ந்த முறைப்படி நாமும் வாழ்வதும், அவர்கள் பேணி நடந்த நபி வழியை நாமும் பேணி நடப்பதும் தான்.அதை விட்டு விட்டு அவர்களின் கப்ருகளின் மீது கட்டடம் கட்டி, கந்தூரி என்ற பெயரில் ஆண்டு தோறும் கல்லறைகளுக்கு விழா எடுப்பதும், அர்ச்சனையும் ஆராதனையும் செய்வதும், நேர்ச்சை என்ற பெயரில் சமாதிகளை நாடிச் சென்று முடி எடுப்பதும், காணிக்கை செலுத்துவதும், உரூஸ் என்ற பெயரில் பாட்டுக் கச்சேரியும் பரத்தையர் நாட்டியமும் நடத்தி கண்டு களிப்பதும், சந்தனக் கூடு என்ற பெயரில் சமாதிகளுக்கு சந்தனத்தில் அபிஷேகம் செய்வதும், இவைகள் யாவுமே அந்த இறை நேசர்களை கேவலப் படுத்தும் செயல்களே தவிர கண்ணியப்படுத்தும் செயல்கள் அல்ல.'எனது கப்ரைத் திரு விழா நடத்தும் இடமாக ஆக்கி விடாதீர்கள்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள்.(அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்)அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்திலேயே விழா நடத்துவது கூடாது என்றிருக்க -அவ்லியாக்களின் கப்ருகளில் ஆண்டு தோறும் விழா நடத்துவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணர வேண்டும்.அவ்லியாக்களின் சமாதிகளுக்குப் பூமாலை போடுவதும், போர்வை வாங்கிப் போர்த்துவதும், உண்டியலில் காணிக்கை போடுவதும், பாவச் செயல்களில் உள்ளவை.பூமாலையாலும் போர்வையாலும் அந்தப் புனிதர்களுக்கு என்ன பிரயோஜனம்? உண்டியலில் போடும் காணிக்கையால் அந்த உத்தமர்களுக்கு என்ன பயன்? இறை நேசர்கள் பெயரால் இடைத் தரகர்கள் அல்லவா கொள்ளை அடிக்கிறார்கள்?யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக. அவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்களாக்கி விட்டனர்.அறிவிப்பவர்: அபூஹூiரா(ரலி) ஆதாரம் :முஸ்லிம்) நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்கள் ஆக்கி விட்டவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்திருக்க, அவ்லியாக்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்குவது எவ்வளவு பெரிய பாவம்?பெண்கள் கப்ருஸ்தான்களுக்குச் செல்வதை பெருமானார் (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள். தர்காக்களுக்குப் பெண்கள் அறவே செல்லக் கூடாது.ஏனெனில் தர்காக்களும் கப்ருஸ்தான்கள் தான்.கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தனர்.(அறிவிப்பவர்: அபூ ஹூரைரா(ரலி) ஆதாரம்:அஹ்மத், திர்மிதி)தர்காக்களுக்குச் செல்லும் பெண்கள் சபிக்கப் பட்டவர்கள். தம் குடும்பப் பெண்களை தர்காக்களுக்கு அழைத்துச் செல்லும் ஆண்கள் மாபெரும் குற்றவாளிகள் என்பதில் சந்தேகமில்லை.அல்லாஹ் கூறுகின்றான்:எவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் விசுவாசங்கொண்டோர்களையும், (தங்களின்) தோழர்களாக எடுத்துக்கொண்டார்களோ நிச்சயமாக அவர்கள்தான் வெற்றிபெற்ற அல்லாஹ்வின் கூட்டத்தினர்.(அல்குர் ஆன் : அல்மாயிதா 5:56)

சர்வதேசப் பிரிவு: இங்கிலாந்தின் தேசிய ஆலோசனை சபையின் தலைவர் 'செய்யித் பரஜானி' அவர்கள், 'இஸ்லாமும், முஸ்லிம்களும் ஐரோப்பா சமூகத்தை விட்டும் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக உள்ளனர்' என்றார்.
கடந்த 7ம் திகதி செவ்வாயன்று தான் விடுத்த அறிக்கையில் செய்யித் பரஜான் அவர்கள், 'இன்று சியோனிஸ்டுக்கள், ஐரோப்பாவில் தீர்மானம் எடுக்கும் முக்கிய அமைப்புக்களில் ஊடுருவியுள்ளனர். மேல்நாடுகளில் இஸ்லாமிய வளர்ச்சி குறித்து பிழையான பிரச்சாரங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு அச்சுறுத்தி வருகின்றனர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
'தற்போது ஐரோப்பாவில் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவர்களில் அதிகமானோர் அடிப்படை ஐரோப்பியர். பிரான்ஸ், இங்கிலாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளில் அரசியல் உயர் பதவிகளில் முஸ்லிம்கள் அங்கம் வகிப்பதை தடுக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், 'இன்று மேற்கத்தியம் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக உளவியற் போரை தொடர இணைந்துள்ளது. முஸ்லிம்கள், ஒற்றுமையாக இயங்குவதன் மூலம் ஐரோப்பியருக்கு இஸ்லாத்தின் அடிப்படைப் போதனைகளை அறிமுகப்படுத்தவும், இஸ்லாம் குறித்து அவர்கள் கொண்டுள்ள பிழையான சிந்தனைகளைப் போக்கவும் இஸ்லாமிய ஆய்வு நிறுவனங்களை ஏற்படுத்துவது அவசியம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அறிக்கையின் இறுதியில், 'இங்கிலாந்திலும் கூட சியோனிஸ்டுகள், அரசியல் நிறுவனங்களில் ஊடுருவியுள்ளதுடன், தீர்மானம் எடுக்கும் பலத்தையும் பெற்றுள்ளதோடு இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர்' என பரஜானி குறிப்பிட்டுள்ளார்.