*** BREAKING NEWS ***திருவாரூர் அருகே தமுமுக நிர்வாகி படுகொலை ***

Tuesday 30 June 2009

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் நாள் முதல் அமெரிக்க படைகள் விலக்கப்பட்டு பாசறைகளுக்குத் திரும்பவுள்ளதால், ஈராக் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் பாக்தாத்தின் பாதுகாப்புப் பொறுப்பிலிருந்தும், பிற நகரங்களின் பாதுகாப்பிலிருந்தும் அமெரிக்க படைகள் விலகிக் கொள்ளவுள்ளன. அங்கிருந்து அவர்கள் பாசறைகளுக்குத் திரும்பவுள்ளனர். இதையடுத்து அந்தப் படைகள் மெல்ல மெல்ல அமெரிக்கா திரும்பவுள்ளன.

இதையடுத்து தாக்குதல்கள் நடைபெறலாம் என்ற அச்சம் இருப்பதால் பாக்தாத் முழுவதும் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

பஸ்ரா, மொசூல் உள்ளிட்ட பிற நகரங்களும் கூட ஈராக் ராணுவத்தினரின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்தநிலையில், பாக்தாத்தின் சாலையோரம் வெடித்த ஒரு குண்டுக்கு 6 பேர் காயமடைந்தனர்.

அதேபோல மேற்கு பாக்தாத்தில் ஒரு கார் குண்டு வெடித்ததில், ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார்.

நன்றி : தட்ஸ்தமிழ்.

0 Comments: