Monday, 29 June 2009
ஈரான் விவகாரத்தில் தலையடாதீர் - ஒபாமாவுக்கு அகமதிநிஜாத் எச்சரிக்கை
Posted by tmmkuk1@gmail.com at 03:59டெஹ்ரான்: ஈரான் அதிபர் தேர்தலுக்குப் பிந்தைய நிலவரம் குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்திருப்பது இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவதற்குப் பதில் மேலும் மோசமடையவே செய்யும் என்று எச்சரித்துள்ளார் ஈரான் அதிபர் மஹமூத் அகமதிநிஜாத்.இதுகுறித்து அவர் அரசுத் தொலைக்காட்சியில் பேசுகையில், ஒபாமாவின் கருத்துக்கள் வியப்பை தருகின்றன. ஏன் எங்களது விவகாரத்தி்ல் ஒபாமா தலையிடுகிறார் என்று புரியவில்லை. மாற்றங்களை விரும்புவதாக அவர்தானே கூறி வருகிறார். பிறகு ஏன் இப்படிப் பேச வேண்டும்.ஈரானுடன் பேச்சு நடத்த தயார் என்று அவர்கள் கூறியவண்ணம் உள்ளனர். ஆனால் அப்படிக் கூறி வரும் நிலையில் ஈரானை கடுமையாக விமர்சிப்பது தேவையா. நிச்சயம் அவர்கள் தவறான பாதையில் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றார் அவர்.
நன்றி : தட்ஸ்தமிழ்
Labels: ஒபாமாவுக்கு எச்சரிக்கை
0 Comments:
Post a Comment